பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்சாளர் ஹபீ­ஸுக்கு ஒருவருடத் தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது.

விதி­மு­றை­களை மீறி ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது பாகிஸ்­தானில் ஆரம்­ப­மா­கி­யுள்ள சுப்பர் லீக் போட்­டியில் ஹபீஸின் பந்து வீச்சில் தவறுகள்  இருப்­பது தொடர்­பாக ஐ.சி.சி. முக்கிய கவனம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குற்­றச்­சாட்டின் ஆரம்ப கட்ட அவ­தா­னிப்­பு­களில் ஹபீஸின் பந்­து­வீச்சில் தவ­றுகள் உள்ளதாக  தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த தீர்­மா­னத்திற்கு தாம் உடன்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.