தெரு நாய்களுக்கான ஆய்வு ஆரம்பம்

உரிமையாளர்கள் இன்றி தெருக்களில் அலையும் நாய்களுக்கான விசேட ஆய்வறிக்கையொன்று சமர்ப்பிக்க கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்ற வரம் தொடங்கிய இக்கணிப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கணிப்பின் நோக்கமானது முறைகேடான நாய்களினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதே.. பொதுவாக இந்நாய்கள் விடியல் 6 மணிக்கு அதிகமாய்  காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் ஆய்வுக்குழு கூறுகின்றது.

இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று தான் ‘ரேபிஸ்’ எனப்படும் வெறி நாய்க் கடியினால் ஏற்படும் நோயினை கட்டுப்படுத்துவதற்காகும்.

இதேவேளை, 8500 நாய்கள் நகரில் பதியப்பட்டுள்ளனவாக இருக்கின்றது, இதற்கென ‘வீட்டுக்கு வீடு’ என்ற நாமத்தில் விசேட வேலைத்திட்டமொன்றும் அமுலுக்கு வர உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.