ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார் – நீதிமன்றம் பலத்த பாதுகாப்பில்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்துக்கு அண்மையில் உள்ள இரண்டு வீதிகள், இரும்பு கம்பிகளான தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைக்களுக்கு வருகை தந்தவர்களை தவிர, வேறு எவரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர்.