கெக்கிராவையில் முஸ்லிம் விரோத சுவரொட்டிகள்

கெக்கிராவை நகரில் சிங்கலே என்ற பெயரில் நகரிலுள்ள முஸ்லிம் கடைகளை அகற்றறு மாறு கோரி சுவரொட்டிகள் நேற்று இரவு 9.00 மணி அளவில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தச் சுரொட்டிகள் ஒட்டும் போது பொலிஸாரிடம் மக்கள் முறைப்பாடு தெரிவித்த போதிலும் பொலிஸார் எந்த நடவடிக்கை எடுக்காமல் பகிரங்கமாக பார்த்துக் கொண்டு நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பொறுமை இழந்த நகரிலுள்ள முஸ்லிம் கடை வியாபாரிகள் பொலிஸ நிலையம் சென்று இந்த சுவரொட்டிகளை அகற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து நகரிலுள்ள சில சுவரொட்டிகள் இரவோடு இரவாக பொலிஸாரால் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சுவரொட்டிகளில் முஸ்லிம் கடைகளை கெக்கிராவையிலிருந்து அகற்ற வேண்டும். முஸ்லிம்களை விரட்ட வேண்டும் என்ற வாசகங்களை உள்ளடக்கி இருந்தன

அத்துடன் சுவரொட்டி ஒட்டியவர்கள் பேருவளை மற்றும் அழுத்கமை போன்ற மாதிரித்தான் இங்கேயும் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG_4113 ef79e2f6-b4a4-4a5d-b230-dc1c44ed681d 752b77d0-29a7-4b9c-b53d-d517e0112dbf IMG_4114