சுமார் 12,000 முறைப்பாடுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளது – ஜனாதிபதி ஆணைக்குழு

சுமார் 12,000 முறைப்பாடுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமையுடன் ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவுள்ளமை தொடர்பில்  ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனைக் கூறினார்.

காணாமற்போனவர்களுக்கு மரண சான்றிதழுக்கு பதிலாக காணாமற்போனவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.