ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரருக்கு மீண்டும் பெப்ரவரி 23 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
(1ம் இணைப்பு)
ஞானசார தேரர் இன்றும் நீதிமன்ற முன்னிலையில்
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கபட்ட போதிலும், அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மீண்டும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.