தாய்ப்பாலை கறந்து சகாக்கள் மீது வீசிய பெண்

உத்தியோகபூர்வ சந்திப் பொன்று பல மணித்தியாலங்களாக நீடித்துக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் தனது தாய்ப்பாலை கறந்து சகாக்கள் மீது விசிறிய சம்பவம் யுக்ரைனில் இடம்பெற்றுள்ளது.

பெரிய அலுவலகமொன்றில் நடைபெற்ற இந்த சந்திப்பு  சுமார் 14 மணித்தியாலங்களாக நீடித்ததாம்.

இதில் பங்குபற்றிய வர்த்தகரான பெண்ணொருவர், நீண்ட நேரமாக இச் சந்திப்பு நீடிப்பது குறித்து விசனமடைந்தார்.

இதனால்,அவர் ஏராளமான ஆண்களுக்கு முன்னால் தனது தாய்ப்பாலை கறந்து சக அதிகாரிகள் மீது விசிறினார்.

இதனால் அங்கிருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களில் சிலர் மடிக்கணினி மற்றும் கைகளால் அப் பெண்ணை மறைப்பதற்கு முயற்சித்தனர்.

‘நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் ,இடைவேளையை அறிவியுங்கள்’ என அப் பெண் சத்தமிட்டுள்ளார் .