கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை

கொழும்பு மற்றும் புறநகரை சுற்றிய பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இன்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.

தெஹிவளை, கல்கிஸ்சை, அத்திடிய, பிலியந்தல, ரத்மலான, மதுகம, பாணந்துறை, பொருபன மற்றும் மகரகம பிரதேசங்களிலேயே இவ்வாறு  மின் தடை ஏற்பட்டுள்ளது.

குறித்த தடைக்கு காரணம், லக்ஷபான தொடக்கம் கொழும்பிற்கு மின் வழங்கும் கம்பி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு என தகவல் வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்றைய தினம் இலங்கை முழுவதிலும் மின்தடை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.