வாஸ் குணவர்தன நீதிமன்றில் ஆஜர்

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகியுள்ளார்.

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டிருந்தார்.

வர்த்தகர் மொஹமட் சியாம் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி காணாமல் போய், இரு தினங்களின் பின் கம்பஹா மாவட்டம் – தொம்பே பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டமை யும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.