கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், நளை 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமாக, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையிலேயே, நாடு முழுவதுமுள்ள மதுபான கடைகள் அனைத்தும் நாளை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.