குறிப்பாக பம்பலப்பிட்டி, கொள்ளுபிட்டி போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகன நெரிசலுக்கு, கொழும்பின் பிரபல கல்லூரிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் பிக் மெட்ச்சே முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
குறித்த கிரிக்கெட் தொடருக்காக ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்படும் வாகன தொடரணிகள் காரணமாகவே, குறித்த வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.