போட் சிட்டி திட்டத்தை மீள ஆரம்பிக்க எழுத்து மூலம் அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சீன முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளது.

துறைமுக அமைச்சினால் நேற்று குறித்த சீன நிறுவனத்துடன் துறைமுக நகர வேலைத் திட்ட நிர்மாணத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னதாக கடந்த 09ம் திகதி கூடிய அமைச்சரவையால் இது தொடர்பிலான அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.