சாமுவேலுக்கு எதிராக ஐசிசி அபராதம்

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் போது; தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை நட்சத்திர வீரர் மாலன் சாமுவேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

நேற்று(03) நடைபெற்று முடிந்த போட்டியின் போது தகாத வார்த்தைகளை பாவித்ததாக மேலும் ஐசிசி தெரிவித்துள்ளது.
2016 இருபதுக்கு 20 உலக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக மாலன் சாமுவேல் பெயர் குறிப்பிடப்பட்டார் என்பதும் குறிப்படத்தக்கது.