உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு – விகாரமகாதேவி பூங்காவில்

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு நாளையும் (05) நாளை மறுதினமும் (06) ஜனாதிபதி தலைமையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.
‘7 பில்லியன் மக்கள்- ஒரே பூமி- பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும்.

இம்முறை உலக சுற்றாடல் தின நிகழ்வின் பிரதான உரையை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆற்றவுள்ளார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன- கொழும்பு நகரசபை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர்.

சூழல் இராஜாங்க அமைச்சின் ஆலோசனையின் பேரில் சுற்றாடல் மக்கள் அமைப்பு- கொழும்பு மாநகரசபை என்பன இணைந்து இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இதனை முன்னிட்டு நாளை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை விழா நடைபெறவுள்ளதுடன் அதன் பின்னர் கண்காட்சியும் காண்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.