பனாமா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியதையடுத்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தனது பிரத்தியேக வரி கணக்கை வெளியிட்டுள்ளார்.
1980களில் பஹாமாஸ் தீவில் பிளேர்மோர் வெளிநாட்டு நிதியத்தை டேவிட் கெமரூனின் தந்தை உருவாக்கினார் என்றும், அந் நிறுவனம் பிரிட்டனில் வரி செலுத்தவில்லை என்றும் பனாமா ஆவணங்கள் தெரிவித்திருந்தன.
இதனை டேவிட் கெமரூனின் தந்தை இயன் கெமரூன் நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டு பங்குகளை வாங்கியதாக ஒப்புக்கொண்ட டேவிட் கெமரூன், அதற்கான அனைத்து வரிகளையும் செலுத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
வரி கட்டாமலிருக்கும் நோக்கத்துக்காக தம் தந்தை இந் நிறுவனத்தை உருவாக்கவில்லை என்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தை டொலர் மதிப்பில் செய்ய அனுமதிக்கப்பட்ட புதிய நடைமுறைக்கேற்பவே இந் நிறுவனத்தை ஆரம்பித்ததாகவும் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.
இந்நிலைலையில் டேவின் கெமரூன் தனது தனி நபர் வரி கணக்குகளை வெளியிட்டுள்ளார். மொத்தம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கான வரி கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.
2014 – 2015 நிதி ஆண்டில் 200.307 பவுண்கள் வருமானத்துக்கு 75.898 பவுண்கள் வரி பணமாக கட்டியுள்ளன. அவரது 140,522 பவுண் சம்பளத்துக்கு, 9,834 பவுண்கள் கட்சியின் செலவுகள், லண்டனில் உள்ள தனது குடும்பத்தின் வாடகை வீடுகள் மூலம் 46,899 பவுண்கள், சேமிப்புக்கான வட்டியாக 3,052 பவுண்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக டேவிட் கெமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் கெமரூன் தனது வரி மற்றும் வருவாய் கணக்குகளை வெளியிட்டுள்ளதன் மூலம் பனாமா பேப்பர்ஸ் விவகாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்ப் பாக்கப்படுகிறது.
தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனம் மூலம் பலன் அடைந்ததாகத் தற்போது கெமரூன் ஒப்புக் கொண்டதையடுத்து, அரசியல் ரீதியாக கெமரூனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.