உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் வனங்கள் மற்றும் வனஜீவராசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், காடழிப்பை தடுப்பதற்கும், சுற்றாடல் சமனிலையை பேணுவதற்கும் புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களை தராதரம் பாராது, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சூழலை பாதுகாத்து, சிறப்பான நாளையை உருவாக்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.