தகுதியில்லாமல் பதவியுயர்வு, ஆசிரிய தொழிற்சங்கம் இன்று முறைப்பாடு

அரசியல் பழிவாங்களுக்குட்பட்டதாக தெரிவித்து கல்வித்துறையிலுள்ள தகுதியற்றவர்களுக்கு பதவி, பதவியுயர்வு மற்றும் வரப்பிரசாதங்கள் என்பனவற்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அத்துறையிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி நிருவாக, ஆசியர் சேவை மற்றும் அதிபர் சேவை தொழிற்சங்கங்கள் இதில் இணைந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்