இந்திய தயாரிப்பான ‘தேஜாஸ்’ என்ற இலகுரக போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘பாகிஸ்தான் உற்பத்தியான JF-17 ரக போர் விமானத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை முன்னர் அவதானம் செலுத்திய போதும் பின்னர், அது கைவிடப்பட்டு, தற்போது இலங்கையின் கவனம் தேஜாஸ் மீது திரும்பியுள்ளதாக அந்த செய்தியில்மேலும் தெரிவிக்கின்றது.
இதேவேளை, தேஜாஸ் விமானம் தொடர்பில் பல நாடுகளும் தற்போது அவதானம் செலுத்திவருவதாகவும் இந்திய செய்தியில் மேற்கோற்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.