நடிகை பிரதியுஷாவின் தற்கொலையில் தொடரும் மர்மம் – பரபரப்பை ஏற்படுத்திய காதலன்

பிரபல தொலைக்காட்சி நடிகை பிரதியூஷா சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு பிரதியூஷாவின் காதலனும், தொலைக்காட்சி நடிகருமான ராகுல் தான் காரணம் என விசாரணையில் உறுதியாகவே தற்கொலைக்குத் தூண்டியவர் என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வந்தார். பிரேத பரிசோதனையில் பிரதீயூஷா பேனர்ஜி ,பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும், மேலும் இறப்பதற்கு முன் கருவுற்றிருந்து அதனை கலைத்துள்ளதும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மும்பை பங்கூர் பொலிஸார் காதலன் ராகுல் சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர் விசாரணை முடிந்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவர் குளியலறைக் கதவைப் பூட்டிக்கொண்டு வெகுநேரம் ஆகியும் திறக்கவில்லை இதுகுறித்து உறவினர்கள் அங்குள்ள மருத்துவர்கள், காவலர்களிடம் தெரிவித்தனர். அதே சமயம் குளியலறையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்தார் ராகுல் சிங். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள் வெளியிலிருந்தே ராகுலுக்கு ஆலோசனைகள் வழங்கியதை அடுத்து ராகுல் வெளியே வந்தார் பின்னர் மருத்துவர்கள் அறிவுரை கூறி ராகுலை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் யாரும் தன்னை விசாரிக்கக் கூடாது , தனக்கு இடையூறு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இப்படி மிரட்டியதாக பிரதியூஷாவின் நண்பர்கள், உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பிரதியூஷாவின் தற்கொலையில் இன்னும் மர்மம் நீடித்துவருகிறது