வீட்டுக்கு அருகில் மருமகள் கைவிட்டுச் சென்ற 3 மாத குழந்தையுடன் பொலிஸ் நிலையம் சென்ற மாமியார்

தனது மரு­மகள் அவ­ரது மூன்று மாத கைக்­கு­ழந்­தையை தனது வீட்டின் அரு கில் கைவிட்டுச் சென்­ற­தாக வயோ­திப பெண்­ணொ­ருவர் அக்­கு­ரஸ்ஸ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்துள்ளார்.

குழந்தை பாலுக்­காக அழுதுகொண்­டி­ருந்தபோது செய்­வ­த­றி­யாது இவ்­வாறு குழந்­தை­யுடன் முறைப்­பாடு மேற்­கொள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்­த­தாக அப் பெண் தெரி­வித்­தி­ருந்தார்.

குழந்தை தொடர்ச்­சி­யாக அழுது கொண்­டி­ருந்­த­மையால் உட­ன­டி­யாக செயற்­பட்ட அகு­ரஸ்ஸ பொலிஸார் வேறொரு முறைப்­பாட்­டுக்­காக வருகை தந்­தி­ருந்த தாயொ­ரு­வரின் மூலம் குழந்­தைக்கு பாலூட்டச் செய்­துள்­ளனர்.

பின்னர் அகு­ரஸ்ஸ பொலிஸ் அதி­கா­ரிகள் வயோ­திப பெண்ணின் முறைப்­பாட்­டுக்­க­மைய விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த போது உற­வினர் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்த நிலையில் குழந்­தையின் தாயைக் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இதன்­போது குறித்த தாயிடம் பொலிஸார் விசா­ரணை மேற்­கொண்ட போது குழந்­தையின் தந்தை வேறொரு பெண்ணை திரு­மணம் செய்து கொண்டு தனி­யாக சென்­றதால் தான் ஆதரவற்றிருந்ததாகவும் இதனாலேயே குழந்தையை கைவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.