வவுனியா நகரசபையில் நேற்று முன்தினம் காலை நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை நகரசபையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபையில் ஏற்கனவே ஏழு பேரின் ஆவணங்கள் ஊழியர்களின் கோவைகள் காணாமற் போயுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்குச் சென்ற ஊழியர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை அங்கிருக்கும் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதுடன் இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.