15 வயதின் கீழ் போட்டிகளில் பங்குபற்றிய காலத்தில் பணமின்றி வீட்டுக்கு நடந்து சென்றேன் – சச்சின் டெண்டுல்கர்

தொழில்சார் கிரிக்கெட் விளை­யாட்டில் பங்­கு­பற்­றி­யதன் மூலம் இன்று கோடீஸ்­வ­ர­ராக வலம்­வரும் சச்சின் டெண்­டுல்கர், இளம் பரா­யத்தில் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து வீட்­டுக்கு வாக­னத்தில் செல்ல பண­மில்­லாமல் நடந்து சென்­றுள்ளார். இதனை அவ­ரா­கவே அண்­மையில் தெரி­வித்­துள்ளார்.

மும்­பையில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற ‘டிஜிபேங்க்’ ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு பேசிய சச்சின், “மும்பை 15 வய­துக்­குட்­பட்டோர் அணிக்கு தேர்வு செய்­யப்­பட்ட போது எனக்கு 12 வயது. நான் உற்­சா­க­மாக இருந்தேன், புனே சென்று அங்கு 3 போட்­டி­களில் விளை­யா­ட­ வேண்டும்.

‘‘எனக்கு துடுப்­பெ­டுத்­தாடக் கிடைத்தபோது நான்கு ஓட்­டங்­களுடன் ரன் அவுட் ஆனேன். இதனால் கடும் ஏமாற்­றத்­துடன் ஓய்­வ­றைக்குத் திரும்­பிய நான் அழத் தொடங்­கினேன். அதன் பின்னர் அங்கு மழை பெய்யத் தொடங்­கி­யதால் மீண்டும் துடுப்­பெ­டுத்­தாடும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை.

வெளியே செல்­வது, படம் பார்ப்­பது, சாப்­பி­டு­வது தவிர வேறு ஒன்றும் செய்ய முடி­ய­வில்லை.

பணத்தை எப்­படி செலவு செய்­வது, எப்­படி சேமிப்­பது என்று அறி­யாத நான், என்­னிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்­து­விட்டேன்.

இந்­நி­லையில் மும்­பைக்கு ரயிலில் திரும்ப என்­னிடம் ஒற்­றைக்­காசு கூட இருக்­க­வில்லை. இரண்டு பெரிய பைகளை சுமந்­து­கொண்டு தாதர் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து சிவாஜி பார்க்­கிற்கு நடந்து செல்ல நேரிட்­டது’’ என்றார்.

‘‘இப்­போது போல் அக் காலத்தில் செல்போன் இருக்­க­வில்லை. போன் இருந்­தி­ருந்தால் ஒரே­யொரு எஸ்.எம்.எஸ். போதும் எனது போனுக்கு பணம் மாறி­யி­ருக்கும் நான் ஒரு கார் ஒன்றை வாட­கைக்கு அமர்த்தி வீடு சேர்ந்­தி­ருப்பேன்” என்று தொழில்­நுட்ப வளர்ச்­சியின் பயனை எடுத்­து­ரைத்தார்.

ஆனால், தொழில்­நுட்பம் சில வேளை­களில் நமக்குச் சாத­க­மாக செல்­லாது என்று கூறிய சச்சின் நகைச்­சு­வை­யுடன் கிரிக்கெட் மைதா­னத்தில் தனக்கு நேர்ந்த கதி ஒன்றை கூறினார்.

அவர் முதன்முதலில் மூன்­றா­வது மத்­தி­யஸ்­தரால் ரன் அவுட் கொடுக்­கப்­பட்­டதைக் குறிப்­பிட்டார்.

‘‘மூன்­றா­வது மத்­தி­யஸ்தர் தீர்ப்­ப­ளிக்கும் முறை வந்­த­வு­ட­னேயே எனக்கு முதன் முதலில் ரன் அவுட் தீர்ப்­பு தான் அளிக்­கப்­பட்­டது.

சில வேளை­களில் தொழில்­நுட்பம் நமக்குச் சாத­க­மாக இருக்­காது. நாம் களத்­த­டுப்பில் ஈடு­ப­டும்­போது மூன்­றா­வது மத்­தி­யஸ்­த­ரி­ட­மி­ருந்து சாத­க­மான தீர்ப்பு நமக்குத் தேவைப்­படும். ஆனால் துடுப்­பெடுத்தாடு­ம்போது அல்ல.

நான் 1989இல் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பிர­வே­சித்­த­போது எங்­க­ளுக்கு முறை­யான அனு­ச­ர­ணை­யாளர் இருக்­க­வில்லை. ஆனால் 2002 – 03களில் ஓய்­வ­றையில் கணினி வைக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

ஓய்­வ­றையில் கணி­னிக்கு என்ன வேலை? எப்­படி துடுப்­பெ­டுத்­தா­ட­வேண்டும் என்று கணினி கற்றுக் கொடுக்க முடி­யுமா? ஆனால் போகப்­போக திட்­ட­மி­டுதல், செயல்­ப­டுத்­துதல் வெறும் கற்­பனை வளம் சார்ந்­தது மட்­டு­மல்ல என்­பதை அறிந்­து­கொண்டோம்.

அதா­வது குறிப்­பிட்ட ஒரு துடுப்­பாட்­டக்­கா­ர­ருக்கு இந்த இடங்களில் பந்து வீசக்கூடாது என்ற விபரங்களெல்லாம் கணினி மூலம்தான் கற்றுக் கொடுக்கப்பட்டது’’ என டெண்டுல்கர் மேலும் கூறினார். திட்டமிடுதலில் தொழில்நுட்பத்தின் பங்கு அபரிமிதமானது” என்றார் சச்சின் டெண்டுல்கர்.