வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஒருவரின் நாக்கை அம்மாணவி, கடித்து துண்டொன்றை எடுத்த சம்பவமொன்று மாவத்தகமவில் இடம்பெற்றுள்ளது.
நாக்கின் ஒரு துண்டை கடித்தெடுத்த அந்த மாணவி, பெற்றோருடன் அந்த நாக்குத்துண்டை எடுத்துக்கொண்டுச் சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார். நாக்கின் ஒருதுண்டை இழந்த நபரை இன்னும் கண்டறியமுடிவில்லை என்று தெரிவித்த பொலிஸார், அந்த நாக்குத்துண்டை வைத்தியாலையில் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.