மருத்துவபீட மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மருத்துவபீட மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் அமைதிப்போராட்டம் நடத்திய மருத்துவபீட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் குறித்த செயற்பாட்டிற்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது முறையற்ற பல்கலைக்கழகத்தை நிருவி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிப்பதால் தாம் போராட்டத்தை நடத்தியதாக மருத்துவபீட மாணவர்களின் தலைவர் ரயன் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தின் போதே தமது மனித உரிமை மீறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.