இலங்கையின் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் வாகனத்தில் மோதி காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மடன்வல, ஹங்குராங்கத்த என்ற இடத்தில் குறித்த இந்த சம்பவம் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் அமைச்சர் திஸாநாயக்க வாகனத்தினுள் இருந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்தவர் ரிஹலகஸ்கட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து அமைச்சரின் வாகனம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.