கஹவத்த – கொடகனந்த கொலைகள் அரசியல்வாதிகளின் சதி

கஹவத்த – கொடகனந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளுடன் ஏதோவொரு அரசியல் பின்புலம் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சி தெரிவிக்கின்றது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அனுர குமார திசாநாயக கூறுகையில், பொலிஸ் சாட்சியங்களுக்கு பின் புலத்தில் இவ்வாறானதொரு அசம்பாவிதம் நடப்பதை தான் பொறுப்புடன் கூறக் கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

ஆனால் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர கூறுகையில், கஹவத்த – கொடகனந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகள் தொடர்பில் பொலிஸ் பிரிவிற்கு எந்தவொரு அரசியல் கட்சிகளும் கை நீட்டவில்லை எனத் தெரிவித்தார்.