கொழும்பு மற்றும் வாகன நெரிசல்மிக்க பகுதிகளுக்கென, தனியான பஸ் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கு ஏற்ற வகையில், கட்டணங்களை தீர்மானித்து விலைச் சூத்திரத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.