தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த வழிகாட்டல் நிகழ்வு இடம்பெறுகின்றது.
தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.