எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு அபாய மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர் எம்.எஸ் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.