முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

அரச சேவையாளர்களை அரசியல் மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்காக இணைத்துக் கொண்டமையினால் அரசாங்கத்திற்கு 401 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010 முதல் 2014 வரையான காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் மொத்த விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் 45 பேர் இவ்வாறு அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டதால் அரசாங்கத்திற்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதென்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும்  தெரிவிக்கின்றது.