ஸ்ரீலங்கன் விமானசேவை தொடர்பிலான விசாரணை இன்று

ஸ்ரீலங்கன் விமானசேவை தொடர்பிலான பாரிய மோசடி விசாரணைகளுக்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றைய தினம் சாட்சி விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர பிரியரத்ன உள்ளிட்ட 6 பேரை இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பிரியங்கர பிரியரத்ன, நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க, விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனோஜ் த வாஸ் குணவர்த்தன, கபில சந்திரசேன உள்ளிட்டவர்களே இன்றைய தினம் விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.