காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலை கொடுத்த இஸ்ரேல்
காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.முன்னதாக தெற்கு இஸ்ரேல் பகுதியை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த 2 வாரங்களில் 3 முறை காஸாவில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களிற்கு ஷலாஃபி என்ற ஜிகாதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், காஸா ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
இந்தத் தாக்குதலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், உயிர்ச்சேர்தம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், இஸ்ரேல் – காஸா எல்லை மூடப்படுவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது