நிவாரணக் களத்தில் சதுரிகாவின் பங்கு இதுதான்.. (PHOTOS)

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஜனாதிபதியின் குடும்பத்தினர் நேற்று களமிறங்கியுள்ளனர்.

ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன நேற்றையதினம் அரநாயக்கவில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

அரநாயக்க மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க பிரதேசத்தின் தற்போதைய நிலை குறித்து சதுரிக்காவுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதேபோன்று ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிரிசேனவும் கொலன்னாவை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு சிங்கள மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள ராஜசிங்க மகாவித்தியாலயத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

கொலன்னாவை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் பிரசன்ன சோலங்க ஆராச்சி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.