தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் இற்குப் பதிலாக குசல் ஜனித் பெரேராவின் பெயரினை உள்வாங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற சர்வதேச டெஸ்ட் வரத்தினை சுவீகரித்த குசல், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 5இனிங்க்சில் 169புள்ளிகள் குவித்துள்ளார். மேலும், இரண்டு அரைசதங்களை கடந்து குசல் விளையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.