பண்டாரநாயக விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது

சட்டவிரோதமாக பெருந்தொகை தங்கத்துடன் இலங்கைக்கு வந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 09.00 மணியளவில் துபாயில் இருந்து வந்த விமானத்திலேயே இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் வசம் இருந்து 10 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.