தனியான முஸ்லிம் மாவட்டத்தை மைத்திரி வழங்குவாரா??

கிழக்கில் தனியாக முஸ்லிம் மாவட்டமொன்றை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு செயலில் ஜனாதிபதி இறங்கினால் அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு அபயராமவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட பல முக்கியஸ்தகர்கள்  கலந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது.