மலேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொழில் வாய்ப்பு தொடர்பில் இலங்கை உடன்படிக்கை

மலேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொழில் வாய்ப்பு தொடர்பில் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இவ்வாறு கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கைகளின் மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.

மலேசியாவில் விவசாய உற்பத்தி நிலையத்தில் சுமார் 5000 வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, சுமார் 50 பராமரிப்பாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.