107வது ரொடரி மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பினார் பிரதமர்

107வது ரொடரி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் தென்கொரியா நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

பிரதமர் இன்று காலையில் நாடு திரும்பியுள்ளதாக பிரதம அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச ந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, தென்கொரியப் பிரதமரையும் சந்தித்து பலதரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.