தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று நீதிமன்றில் அஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 15ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ஆட்சிக்கு வந்தால் பொலிஸ் நிதி மோசடி பிரிவு அதிகாரிகள் கல் எறிந்து கொல்லப்படுவார்கள் என டிவி.உபுல் பகிரங்க மேடையில் அறிவித்தார்.
இது தொடர்பில் விசாரணை நடத்த கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.