மஹிந்தானந்தவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

பாரிய இலஞ்ச, ஊழலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான, நாவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள நிலத்தை மஹிந்தானந்த அறக்கட்டளைக்கு குத்தகைக்கு கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.