தெஹிவளையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 20,000ரூபாய் இலஞ்சம் பெற்றமையினால் நேற்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த கல்கிஸ்ஸ சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.