தேசிய கணக்காய்வு குறித்த உத்தேச சட்ட வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

தேசிய கணக்காய்வு குறித்த உத்தேச சட்ட வரைவு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த உத்தேச சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தேசிய கணக்காய்வு சட்ட மூலம் குறித்து பிரச்சாரம் செய்ததுடன் வாக்குறுதியும் அளித்திருந்தது.

இதன் அடிப்படையிலேயே குறித்த உத்தேச சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் ஊடாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளது.