பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று மியன்மார் நாட்டை சென்றடைந்துள்ளார்.
மியன்மாரில் நடைபெறும் சில மத நிகழ்ச்சிகளிலும் உலக பௌத்த தலைவர்களின் மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காகவே ஞானசார தேரர் அங்கு சென்றுள்ளார்.
ஞானசார தேரரை வரவேற்பதற்காக மியன்மார் பௌத்த அமைப்பின் தலைவரான அஷின் விராத்து தேரர் மண்டலே சர்வதேச விமானத்திற்கு வந்துள்ளார்.
அங்கு ஞானசார தேரருக்கு மதிய தானம் வழங்கப்பட்டுள்ளது.
மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அஷின் விராத்து தேரர் சார்ந்த அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த அமைப்பின் மேற்கொண்ட வன்செயல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயிரணக்கானோர் அகதிகளாகியுள்ளதுடன் அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.
அஷின் விராத்து தேரர் பௌத்த பயங்கரவாதத்தின் அடையாளம் என சர்வதேச ஆங்கில இதழ் ஒன்று விபரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



