பாக்தாத்தில் இரட்டைக்கார் குண்டுவெடிப்பு – சுமார் 80 பேர் பலி

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இரட்டை கார் குண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

காராடா மாவட்டத்தின் மத்தியில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன்பாக இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தற்கொலை கார் குண்டு தாக்குதலில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஃபலூஜா நகரை ஈராக் பாதுகாப்புப் படைகள் மீண்டும் கைபற்றிய ஒரு வாரத்திற்கு பிறகு இந்த இரட்டை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது