நாடுதழுவிய அரச வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில்..

நாடு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று நான்கு மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இடம்பெறுகின்றது.

இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகிய இவ்வேலைநிறுத்தம் நண்பகல் 12.00 மணிவரையில் இடம்பெறும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்ஷா அறிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தத்தில் சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று மருத்துவமனை, சிறுநீரகம் மற்றும் காச நோய் மருத்துவமனைகள் என்பன இந்த அடையாள வேலை வேலை நிறுத்தத்தில் இணைந்துகொள்ள மாட்டாது எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.