பலாங்கொடையில் தாயும் மகளும் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக்கொலை

பலாங்கொடை வேவல்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருபெவில்லா பிரதேசத்தில் வீடொன்றில் தாய்( வயது 37) மற்றும் மகள் (13 வயது) ஆகியோர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, வேவல்வத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலங்கள், பாதுகாப்பு கருதி அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளன. குறித்த பெண்ணின் கணவனால் இந்த கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கணவனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.