இலங்கையின் இனவாத அமைப்பான ராவணா பலயவின் இணைப்பாளர் இத்தாகந்த சந்தாதிஸ்ஸதேரர், ஊழல் மோசடி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவர் அரசாங்க வாகனங்களை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரணை செய்வதற்காக அவர் இன்று பாரிய மோசடி தவிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகிறது.