துருக்கியில் நேற்றிரவு இராணுவத்தின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியில் ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை சுமார் 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 17 பேர் பொலிஸாரும் அடங்குகின்றனர். அங்காராவில் பார்லி கட்டிடம் அருகே இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சதிப் புரட்சியில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.