நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விசேட அறிவிப்பு

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக மின் சக்தி, எரி சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச கணக்காய்வாளரின் கேள்விகள் தொடர்பில் விரைவில் பதிலளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கடந்த வார ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நிலக்கரி கொள்வனவு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள கணக்கு அறிக்கையில் சிக்கல் நிலை காணப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது