அவன்ட்கார்ட் கெப்டனின் விளக்கமறியல் நீடிப்பு

அவன்ட்கார்ட் மெரின்டைம் நிறுவனத்தினால் காலி துறைமுகத்தில் நடத்திச் செல்லப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை கப்பலின் உக்ரைன் நாட்டு கெப்டனுக்கான விளக்கமறியல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவர், இன்று 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவருடைய விளக்கமறியல் நீடிக்கப்படடுள்ளது. இவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.